Wednesday, August 7, 2013

இஸலாம் எண்டா இப்ப இடி சம்பல் போல-

இஸலாம் எண்டா இப்ப இடி சம்பல் போல-

இலங்கையில் மொத்தம் ஏழு முப்திகள் அல்ல குஞ்சும் குராலுமா ஒரு கும்ப முப்திகள் அளவுக்கு மிஞ்சினா இப்படிதான் வாப்பாட செல்ல கேக்காத தகப்பஞ் சாமிகள் கூடிவிடும் தன் மூப்புக்கு நடக்கும் ஒரு காக்காவும் இஸ்லாத்த அவங்களுக்கு ஏத்தாப்பல மாத்திட்டாங்க போல என்ட ஸல்லல்லாவே இஸ்லாத்துக்கு இப்ப எத்தினையோ உம்மாவும் வாப்பாவும் பல சேனட வாய்க்குள்ள இவனுகளே அவல் போட்டுடானுகள் போல நாமே அவண்ட மண்ட கொதிய கிளப்புற மறுகா அவன்ட மண்ட கொதிக்கு மருந்து தேடுறா இந்த மச்சான் மாரு என்ன மச்சி ஞாபகத்திலயா இருக்காங்க சமூகம் எண்டா என்ன சம்பல் போடுற சாமானா ஆளாளுக்கு கொச்சிக்கா வெங்காயத்தையெல்லாம் கொண்டுவாறீங்க இஸ்லாம் எண்டா இப்ப இடி சம்பல் போல

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே நம் கரங்கள் வலுவிழந்துவிட்டதா..? தொழுகைக்கு இடம் இல்லை என்று கால் மிதியை உதறிப் போட்டுக் கொண்டு அதில் மனங் கோணாமல் ஏழை பணக்காரன் எல்லோரும் ஒரே சஹ்பில் நின்று தொழுது கொண்டு சந்தோஷமாய் வீடு திருமபிய காலங்கள் ஒழிந்து இப்போது ஆளுக்கு ஒரு இஸ்லாம் என்றாகிவிட்டது இப்போது இஸ்லாத்தில் எல்லோரும் முப்திகள் சுப்ஹானல்லாஹ் இப்போது ஆளுக்கொரு பெரு நான் நம்முடைய இந்த பிளவில் சந்தோஷப்படப் போவது யார் என்று நமக்கே தெரியும் நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இதுதான் நண்பர்களே நம் வலுவிழந்த கைகளை இறுகப் பற்றிக் கொள்வோம் இன்ஷா அல்லாம் குளிர் காய நனைக்கும் ஈனப் பிறவிகளுக்கு நாமே போர்வை கொடுப்பதா நாம் ஒற்றுமையை காட்ட வேண்டிய தருணத்தில் இப்படி ஒரு பிளவா பிரித் ஓதும் சாத்தான்கள் இனி சும்மா இருப்பார்களா வாப்பாக்கு பிள்ளை பெயர் வைக்கும் காலம் வந்தால் இப்படித்தான் வேறு மதத்து காக்காவெல்லாம் கூடி நின்று சிரிப்பானுங்க

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment