Monday, August 26, 2013

சிறகு முளைத்த சூரியன்-


நான் ஒரு சூரியனை வரைந்து கண்ணாடியிடம் காட்டிய போது கைகளை திருகி பறித்துக் கொண்டது எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அது தரவேயில்லை சிவப்பு நிற சூரியனை காண நேரும் போதெல்லாம் பழைய ஞாபகத்தில் மழை பெய்து ஆறுகள் பெருக்கெடுத்து கண்களுக்குள் ஓடுவதாக பொய் காரணம் கூறி கண்ணாடிக்குள்தான் எங்கோ ஒழித்து வைத்திருக்கிறது நாளை அந்த சூரியனை காட்சிப் படுத்த வேண்டும் ஆசை மிகுதியால் கண்ணாடியை உடைத்து விட்டு சிதறிக்கிடந்த எத்தனையோ 'நான்'களுக்குள்ளிருந்து சூரியனை எடுத்த போது சூரியனுக்கு இரண்டு இறகுகள் முளைத்திருந்தன -ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment