Wednesday, August 7, 2013

என் அறையில் தனியாக இருந்தேன்

என் அறையில் தனியாக இருந்தேன்
நான்கு சுவர்களில் ஏதோ ஒன்றிற்கு
திடீரென வாய் முளைத்தது
கை முளைத்தது
கால் முளைத்தது
பேச யாரும் இன்றி நான் கசக்கி எறிந்த
கடதாசிகளை ஒவ்வொன்றாய் வாசித்தது
பின் நீண்ட மழைக் காலம் ஒன்றை
விழிகளில் சுமந்து கொண்டு
அறைச் சுவர் வெளியேற
தொடங்கியிருந்தது
நிலா தற்கொலை செய்து கொள்ளும்
அந்த நதிகளுக்கு

-ஜெம்சித் ஸமான்

No comments:

Post a Comment