சோதனை முயற்சிக்காய் புது வித கற்பனையில் எழுதப்பட்ட கவிதை உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
இறக்கை முளைத்த
ஒரு கல்லை பார்த்தேன்-
ஒரு கல்லை பார்த்தேன்
அதற்கு இரண்டு அழகான
இறக்கைகள் இருந்தது
கடவுளின் இருப்பை உறுதி செய்ய
அந்த கல்லின் இறகுகளில்
அழகான ஓவியங்கள் மிளிர்ந்தது
அதன் உணர் கொம்புகளால்
என்னை தழுவி ஓ நீ மனிதனா என்றது
என் கண் முன் பறந்து சென்ற அந்தக் கல்
ஒரு அழகான பூவின்
வயிற்றில் விழுந்து
கருவை கலைத்தது
வேதனையால் நிரம்பி பூக்கள்
பனி பனியாக அழுதது
பூக்களில் இருந்து
அந்தக் கல் பறந்தபோது
பார்த்தேன்
கால்கள் நிரம்ப
மஞ்சள் மஞ்சளாய் ஒட்டியிருந்தது
எத்தனையோ கைக் குண்டுகள்
நாளையும் ஒரு யுத்தம் வரலாம்
-ஜெம்சித் ஸமான்
No comments:
Post a Comment