Thursday, August 15, 2013

தாய் பால்-



இன்று எனக்கு
அருந்தக் கிடைத்தது
ஒரு கோப்பை
கசந்த தேநீர்தான்

தாய் ஊரில் இல்லாத போது
அருந்துகின்ற
தேநீர் கூட
கசப்பாய்தான் இருக்கிறது

உம்மா
எனககு நீ ஊட்டாத
தாய்ப்பாலின் சுவை
எப்படி இருக்கும் உம்மா..?

குழந்தையாய்
உன் மடி மீது கிடந்து
நான் அழுத போதெல்லாம்
நீ ஊட்டிய
புட்டிப்பால் கூட இப்படித்தான்
கசப்பாய் இருந்தது உம்மா

-ஸமான்


*நான் பிறந்த போது என் தாயின் மார்பில்
பால் சுரப்பு இருக்கவில்லையாம்

No comments:

Post a Comment