Saturday, August 10, 2013

புத்தன் இறந்துவிட்டான் -



புத்தன் இறந்துவிட்டான்
போதி மரத்தை தறித்து
சிறு சிறு போதி மரக் கொள்ளிகளால்
புத்தனின் உடலை மூடி
எரித்துவிட்டார்கள்

போதி மரம் நின்ற இடத்தில்
துவேச நீரூற்றி
வேறு ஏதோ ஒரு பெயர் தெரியாத
மரத்தை வளர்க்கிறார்கள்

அது நிச்சயமாய்
போதி மரம் அல்ல

No comments:

Post a Comment