Wednesday, August 7, 2013

தற்கொலை செய்த காற்று


இன்று
காற்றை என்னால்
சிறைப்படுத்த முடிந்தது
அதன் கைகளையும்
கால்களையும் கட்டி
அறையில் அடைத்து வைக்க முடிந்தது
காற்றோடு சிறிது நேரம் பேசிவிட்டு
தேநீர் கொடுத்து அனுப்பினேன்
தெருவில் நடந்து சென்ற காற்று
உடனே என் அறைக்கு திரும்பி வந்தது
உயிரினங்கள் எல்லாம் மரித்து விட்ட
உலகில்
தனிமையில் எப்படி வாழ்வது என்றது
நான் பதில் சொல்லும் முன்பே
காற்று தற்கொலை செய்து கொண்டது
நான் எப்போதும் போல
சுவர்களோடு இரவு உணவு அருந்தினேன்
கண்ணாடிகளோடு பேசினேன்
மின் விளக்கோடு சிரித்தேன்
காற்றும் அறியாத ஒரு வாழ்வை
நான் வாழப் பழகியிருந்தேன்

-ஜெம்சித் ஸமா

No comments:

Post a Comment