Wednesday, August 7, 2013

வன் புணர்வு



வன் புணர்வின் பின்
பாசிக் குளத்தில் நிர்வாணமாக கிடக்கிறது
அவளுடைய செத்த உடல்
அடி வயிறு பொத்தி கதறி அழும் தாயின்
புழுதி மணல் ஒட்டிய கால்களுக்கு கீழ்
காளான்கள் நசுங்கி மனிதம் நாறின

கதறி அழும் தாயின் ஈர விழி முன்
பொம்மைகளோடு குதித்து விளையாடினாள்
பத்து வயது சிறுமி

பறக்க வேண்டிய சிறகுகள்
உளுத்து மண் கெளவின

அவளுடைய வெள் உடுப்புகள்
வறள் நில முள் பற்றை மீது கன்னி ரத்தம் ஊறிகிடந்தது

மலை கல்லில் விழுந்து
சிதறின பிள்ளை முகம்
நீர் தாவர அடைசலில் ெ ள்ளை சப்பாத்துகள் மிதந்த

முளை கருகி கிடந்தது வம்மி பிஞ்சு

சின்ன விரல்கள் செய்த
காகித படகுகள் கசக்கி எறியப்பட்டன

வண்ணத்து பூச்சின் இறகுகள்
பிய்க்கப்பட்டு உடலை கடியன்கள் அரித்தன

கண் குழிக்குள் ஈர குறி நீர்
நிரம்பி வழிந்தது
கரு அறையில் சினை கூடி
நரி நகங்களுக்கு பயந்து
ஜனிக்கமாட்டோம் என கத்தின
மீன் குஞ்சுகள்

மறுநாள்
மலையின் அடி வான் இருட்டில்

கதற கதற
கற்பழிக்கப்பட்டு கிடக்கிறது
பனி குளிரில் உடல் விறைத்த
சில நட்சத்திரப் பிஞ்சுகள்..


-ஸமான்

No comments:

Post a Comment