Tuesday, August 27, 2013

இழந்து போன காடு-


காடு மழையை
தொலைத்திருந்தது
கதவை திறந்து
வெளியே வந்தது நீல மேகம்
அதற்குள்
வரட்சியின்
இரண்டு கண்களைக் கண்டேன்
நேற்று வாசித்த நாவலில்
இதே அத்துவானக் காட்டில்
துள்ளி விளையாடிய
இரண்டு மான் குட்டிகளும்
கண்கள் இன்றி
இறந்து கிடந்தன
உறு புலியின் தீராப் பசி
மான்களின் கண்களாகி
பார்த்து பார்த்து அழுதது
இழந்து போன காட்டை

-ஸமான்

No comments:

Post a Comment