Thursday, August 15, 2013

கொடுக்கு நீர்



செத்த அகாலம்
அழுக்கு போர்வை உள் வியர்க்கும்
நிர்வான இரவு
ஈரமூறிய சிவப்பு விளக்கின்
மெல் ஒளியில் நிழல் தின்று நீர் விழுந்து நெளிகிறது நச்சு பாம்புகள் யோனி உள்

போதி மரங்கள் சரிந்து
மண் கெளவின
குறி விறைத்த குதிரையின் பசி தீர்ந்து
பிணி வந்து அழுந்தி செத்தன

போதி மர உளுத்த கிளை ஒன்றில்
குந்தி அமர்ந்து சீலை அவிழ்க்கிறாள்
விலை மாது ஒருத்தி

புழுத்த அவள் யோனி உள் கொம்பு உயர்த்தின கருந் தேள்கள்
காளான்கள் உள் நசுங்கி நாறின
ஆண் உறைக்குள் குழந்தைகள் வளர்ந்தன
யோனி தின்ற எறும்பின் பச்சையம் கருகி
பிணியோடு வாழ்கிறது நிலா..
வெள்ளி பிஞ்சுகளில்
நோய் குறி கண்டு செத்தன
முது மரமும் முளை செடிகளும்..!!

( இக் கலவியில வழியும் சொட்டு ஈரமும்
விஷ தேள்களின் கொடுக்கு நீர்தான்)

-jamsith zaman

No comments:

Post a Comment