Saturday, August 31, 2013
காலி கோக் ரின்கள்-
அருந்தி முடித்த காலி கோக் ரின்களை
நசித்து எறிவதும்
மிச்சம் மீதி துளிகளில்
காற்று சிலிர்ப்பதும்
வேண்டும் என்றே கால்களால் அதை உதைத்து கொண்டு
தெருவில் நடப்பதும்
விருப்பமுடையதாய் இருக்கிறது
கோக் ரின் காற்றில் எழும்பி
விர்ர்ர்ர் என்று பறந்து
தெருவில் டங்ங்ங்ங் என்று வீழும் போது
திரும்பி பார்க்கும் மனிதர்களும்
வெருண்டோடும் நாய்களும்
கும் என்று பறக்கும்
பறவைகளும்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்வதும் என
இந் நிகழ்வுகள் நகரத்தின் சாலைகளில்
சர்வ சாதாரணமானவை
வெறிச்சோடிய தெருவில்
இரவை தன் வெறுமைக்குள்
நிரப்பிக் கொள்ளும்
காலி கோக் ரின்கள் என் கனவிலும்
உருள்கின்றன
இரவில் வீழும் விர்ர்ர்ர் டங்ங்ங்ங் சப்தங்கள்
ஆழ் கடலின் அமைதியில் கவிந்து அழிகின்றன
-ஜெம்சித் ஸமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment